Friday, 18 December 2015

சைனஸ்






அறிகுறிகள்:
 
சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலைபாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற  மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.
 
சைனஸ் அறைகள்:
 
மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன. நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன.
 
முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே தடுக்கும்
 
வழிமுறைகள்:
 
 சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
 
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
 
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.
 
குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.


”நம் தலையில் நிறைய எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளில் இருக்கும் வெற்று அறைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம். இந்த சைனஸ் அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இந்த சைனஸ் அறைகளை, பொட்டு எலும்புக் காற்று அறை (நெற்றியில் இருப்பது), மெத்தை எலும்புக் காற்று அறை (இரு கண்களுக்கு இடையில் இருப்பது), கன்ன எலும்புக் காற்று அறை (இரண்டு கன்னங்களிலும் இருப்பது), ஆப்பு எலும்புக் காற்று அறை (பின்னந்தலையில் இருப்பது) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு காற்று அறைகளில் உருவாகும் அனைத்துத் திரவங்களும் மூக்குக்குத்தான் வருகிறது.”
”சைனஸ் குறைபாடு எப்போது வருகிறது?”
”சாதாரணமாக சைனஸ் அறைகளில் இருந்து திரவம் சுரந்துகொண்டே இருக்க வேண்டும். இந்தக் காற்று அறைகளின் வடிகால்கள் அடைபடும்போது, சைனஸ் தொல்லை (Sinusitis)ஏற்படுகிறது. நீண்ட நாட்கள் அடைபட்டால், சீழ்பிடித்துவிடும். சைனஸ் பிரச்னையாக மாறும்போது ‘சைனஸைட்டிஸ்’ என்று சொல்கிறோம். மூக்கின் உள்ளே இருக்கும் ‘மியூகஸ் மெம்ப்ரேன் (Mucous membrane) என்ற நுண்ணிய இழைகள்தான் வெளியில் உள்ள மாசு எதுவும் மூக்கினுள் நுழைந்துவிட முடியாதபடி வடிகாலாகச் செயல்படுகின்றன. சைனஸ் அறைகளைச் சூழ்ந்திருக்கும் இந்த சளிச் சவ்வினால்தான்சுவாசம் ஈரத்தன்மையுடன் இருக்கிறது. வெளியில் இருந்துவரும் வறண்ட காற்றை இந்த ‘மியூகஸ் மெம்ப்ரேன்’தான் வடிகட்டி ஈரத்தன்மையுடன் நுரையீரலுக்குள் அனுப்புகிறது.
இந்த சைனஸ் அறைகளுக்குள் அடைப்பு ஏற்படும்போது, சைனஸைட்டிஸ் என்ற பிரச்னையாக மாறுகிறது.”
”சைனஸைட்டிஸ் வருவதற்கு என்ன காரணம்?”
”மூக்கு அடைப்பதால்தான் சைனஸ் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், சளி. ஒவ்வாமை காரணமாகச் சளி ஏற்படுகிறது. உணவால் ஏற்படும் ஒவ்வாமை, காற்று மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமை என இரண்டு வகைகள் இருக்கின்றன.
சளியைத் தவிர ‘சைனஸைட்டிஸ்’ வர இன்னொரு காரணம் மூக்கின் அமைப்பு. மூக்கு எல்லோருக்கும் நேராக இருப்பது இல்லை. சிலருக்கு வளைவாக இருக்கும். மூக்கை வலது பாகம், இடது பாகம் என்று இரண்டாகப் பிரித்தால், இதன் இடையில் இருக்கும் நடுச்சுவர் சிலருக்கு வளைந்து இருக்கும். மூக்கின் நடுச்சுவர் வளைந்து இருக்கும்போது, உள்ளுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறாமல் பாதையை அடைத்துக்கொள்ளும். இதனாலும் சைனஸைட்டிஸ் வரும்.”
”சைனஸில் வேறு வகைகள் இருக்கின்றனவா?”
”சாதாரணமாக எல்லோருக்குமே ஜலதோஷப் பிரச்னை வந்திருக்கும். அதிகபட்சமாக ஒருவாரத்தில் சரியாகிவிடும். ஒரு வாரத்துக்கும் மேல் இருந்தால் அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.
இந்தப் பாதிப்பு வரும் காலகட்டத்தை வைத்து மூன்று வகைகளாகச் சொல்லலாம். சளித் தொல்லை நான்கு வாரம் தொடர்ந்து இருந்தால் அதை துரித நோய்(Acute sinusitis) என்றும், நான்கு வாரங்களுக்கு மேல் 12 வாரங்கள் வரை இருந்தால் நோயுடைய துரித நோய் (Sub acute sinusitis)என்றும், மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தால் அது நீண்ட நாள் நோய் (Chronic sinusitis) என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.”
”சைனஸைட்டிஸ் அறிகுறிகள் என்னென்ன?”
”மூக்கு அடைத்திருப்பதை நாமே தெரிந்துகொள்ள முடியும். இருமல், தொண்டையில் வலி, காய்ச்சல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். வாசனை தெரியாது, சைனஸ் எலும்புகளின் மேல் தொட்டுப் பார்த்தால், வலி இருக்கும். மூக்குக்குள் தொற்று ஏற்பட்டால், கெட்ட நாற்றம் அடிக்கும். சாதாரண சளித் தொல்லையோடு இந்த அறிகுறிகளும் இருந்தால், அது சைனஸைட்டிஸாக இருக்கலாம்.”
”சைனஸ் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள்பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்…”
” ‘சிலர் ஏ.சி. அறையில் இருப்பது உடம்புக்குச் சேரவில்லை’ என்று சொல்வார்கள். நம் சுற்றுப்புறச்சூழல் அசுத்தமாக இருக்கிறது என்பார்கள். ஆனால், நாம் இன்று ஏ.சி. அறையிலும், மாசுபட்ட சூழலிலும்தான் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்வதே நல்லது.
இதற்குச் சுய அக்கறைதான் முதல் சிகிச்சை. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, சத்தான ஆகாரங்கள் உண்பது, உடற்பயிற்சி செய்வது, ஆவி பிடிப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக மூச்சுப் பயிற்சி (பிராணயாமா) செய்துவந்தால், சைனஸ் தொந்தரவோ, ஆஸ்துமாவோ நம்மை எளிதில் நெருங்க முடியாது.”
”சைனஸ்தான் ஆஸ்துமாவாக மாறுகிறதா?”
”சைனஸ் மூக்கில் இருக்கும் பிரச்னை. ஆஸ்துமா என்பது நுரையீரல் பிரச்னை. இரண்டுக்கும் அடிப்படைக் காரணம் ஒவ்வாமை. ஆனால், இரண்டும் வெவ்வேறானவை. நுரையீரலில் வரும் சுவாசப் பிரச்னை என்பது நுரையீரலுக்குக் காற்று செல்லும் வழி சுருங்கி, சுவாசிக்க முடியாமல் சிரமமப்படுவது. இந்தக் கட்டத்தில் ஸ்டீராய்டு, ஆன்டிபயாடிக் மருந்து வகைகள் கொடுப்பார்கள்.
எல்லா சைனஸும் ஆஸ்துமாவாக மாறும் என்று சொல்ல முடியாது. நுரை யீரலுக்குக் காற்று செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள சுருக்கம் காரணமாக, மூக்கில் சைனஸ் குறைபாடு ஆரம்பிக்கும். ஆஸ்துமாவின் ஆரம்பக் கட்ட அறிகுறியாகவும் சைனஸ் இருக்கலாம். ஆனால், எல்லா சைனஸ் குறைபாடும் ஆஸ்துமாவாக மாறுவது இல்லை.”
”சைனஸ் பிரச்னைக்கு என்ன சிகிச்சை?”
”மூக்குக்குள் சதை வளர்ந்திருந்தால் அடைப்பை நீக்குவதற்கோ, மூக்குக்குள் இருக்கும் நடு எலும்பு வளைந்து இருந்தால் அதைச் சரிசெய்வதற்கோ, அறுவைச் சிகிச்சை செய்ய நேரும். இதன் பிறகு சளி அடைப்புத் தொல்லை இல்லாமல் போய்விடும். மாசு ஒவ்வாமை காரணமாக சிலர் தும்மிக்கொண்டு இருப்பார்கள். இதனால் மூக்குக்குள் வீங்கிப்போயும் அடைப்பு ஏற்படும். பொதுவாக, ஒவ்வாமையால் வருவதுதான் சைனஸ் குறைபாடு. இந்தக் குறைபாட்டை மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிடலாம். ஆனால், நாள்பட்ட ‘சைனஸைட்டிஸ்’ என்று மாறிவிட்டால், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.”


மழைக்காலம் தொடங்கி விட்டால் போதும்... ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா, சளி, இளைப்பு என்று ஆரோக்கியப் பிரச்னைகள் வரிசைகட்டி வந்துவிடும். அதிலும் மூக்கில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்னையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்

‘சைனஸ்’ என்றால் 
நம் மூக்கைச் சுற்றி நான்கு ஜோடி காற்றுப்பைகள் (Para Nasal Sinuses) 

உள்ளன. இதற்குப் பெயர்தான் சைனஸ். மூக்கின் உட்புறமாக புருவத்துக்கு மேலே நெற்றியில் உள்ள சைனஸ், ஃபிரான்டல் சைனஸ். மூக்குக்கு இரு புறமும் 
கன்னத்தில் உள்ள சைனஸ், மேக்ஸிலரி சைனஸ். கண்ணுக்கும் மூக்குக்கும் நடுவில் உள்ளது, எத்மாய்டு சைனஸ். கண்களுக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ள சைனஸ், பீனாய்டு சைனஸ். இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரச்னைதான்.நாம் சுவாசிக்கும் காற்றை தேவையான வெப்பத்தில் நுரையீரலுக்குள் அனுப்பும் முக்கியமான வேலையை இந்த சைனஸ் காற்றுப்பைகள் செய்கின்றன. 
சாதாரணமாக சைனஸ் அறைகளிலிருந்து சிறிதளவு திரவம் சுரந்து, மூக்குக்கு வரும். மூக்கில் ‘மியூகஸ் மெம்பரேன்’ எனும் சளிச் சவ்வு இருக்கிறது. சைனஸ் திரவம் இதை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதன் பலனால், வெளிக்காற்று வெப்பத்துடன் நுழைந்தாலும், அது  ஈரப்படுத்தப்பட்டு  நுரையீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இந்த சைனஸ் அறைகளின் திரவ வடிகால்கள் அடைபட்டு, அங்கு திரவம் தேங்கும்போது, அங்கு அழற்சி உண்டாகும். இதன் விளைவால் சைனஸ் பிரச்னை (Sinusitis) ஏற்படுகிறது.

சைனஸ் பாதிப்பு 

ஆரோக்கியக் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தான் சைனஸ் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போது சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ என அழைக்கப்படுகிற மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்னையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படைமாசடைந்த காற்றில் கலந்து வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும் போது, அங்குள்ள ‘சளிச் சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால்,  தூசு, புகை, வாசனை திரவியம் காரணமாக ஒவ்வாமை 
ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதை சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில்  நனைந்தால் இதே நிலைமைதான். 

சைனஸ் அறையில் அழற்சி அதிகமானாலும், மூக்கில் சதை வளரும்போதும் இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார் கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை மோசமடையும்.

அறிகுறிகள் 

அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். முகம் கனமாகத் தெரியும். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். 

இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். பற்கள்கூட வலிக்கலாம். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது... ருசியை உணர முடியாது.

நோயின் வகைகள்

1. திடீர் சைனஸ் அழற்சி (Acute sinusitis). இது திடீரெனத் தாக்கும். 2 வாரங்கள் இதன் பாதிப்பு இருக்கும். ஒரு சிலருக்கு அதிகபட்சமாக 4 வாரங்கள் வரை பாதிப்பு நீடிக்கும்.
2. மிதமான சைனஸ் அழற்சி (Subacute sinusitis). திடீரெனத் தாக்கும் இதன் பாதிப்பு 8 வாரங்கள் இருக்கும்.
3.நீடித்த சைனஸ் அழற்சி (Chronic sinusitis). இதன் பாதிப்பு 8 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்.
4.தொடரும் சைனஸ்அழற்சி (Recurrent sinusitis). ஒரு வருடத்தில் 3முறைக்கு மேல் சைனஸ் தொல்லை வந்தால் அதை ‘தொடரும் சைனஸ் அழற்சி’ என்கிறோம்.
பரிசோதனைகள் என்னென்ன?

சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது வழக்கம். இதில் சந்தேகம் வரும்போது சி.டி. ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டோஸ்கோப்பி (Nasal endoscopy) பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இவற்றுடன் வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமையைக் கண்டறியும் பரிசோதனைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் மேற்கொள்ளப்படுவதுண்டு.
என்னென்ன சிகிச்சை? 

ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த ஆன்ட்டிஹிஸ்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும்.  சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது. 

இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயர்களை பயன்படுத்தலாம். இவற்றால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. மூக்கின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைப் பயன்படுத்துவதால், ரத்தத்தில் ஸ்டீராய்டு மருந்து கலப்பதற்கு வாய்ப்பில்லை. மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இந்த மூக்கு ஸ்பிரேயர்களை பயன்படுத்த வேண்டியது முக்கியம். 

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடலாம். இவற்றை மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டும். நோயாளி சுயமாக அடிக்கடி இந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. 

எண்டோஸ்கோப்பி 
முன்பெல்லாம் சைனஸ் திரவத்தை வெளியேற்ற மூக்கினுள் துளை போடுவார்கள். இப்போது  எண்டோஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், வலி இல்லாமல் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து முழு நிவாரணம் அளிக்கமுடியும். மூக்கின் நடு எலும்பு வளைவு, சதை வளர்ச்சி போன்றவற்றுக்கும் இந்தக் கருவி  மூலம் சிகிச்சை  தர முடியும்.

தீய விளைவுகள் 
சைனஸ் பாதிப்பு மிகவும் மோசமானால், சில நேரங்களில் அங்குள்ள நோய்த்தொற்று மூளைக்கும் பரவி மூளையில் அழற்சி ஏற்பட்டு, மூளைக் காய்ச்சல், மூளை உறைக் காய்ச்சல், மூளையில் சீழ் கட்டுவது போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவிடும். 

தடுப்பது 

சுயசுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம் பேணுவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின் அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஒவ்வாமைப் பொருளைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது முகத்தில் சுகாதார மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தினமும் அரை மணி நேரம் பிராணாயாமம் செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

செய்யக்கூடாதவை

* குளிர்பானங்கள் கூடாது. 
* பனியில் அலையக் கூடாது. 
* புகைபிடிக்கக் கூடாது. 
* புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது. 
* மூக்குப்பொடி போடக் கூடாது. 
*மூக்கை பலமாக சிந்தக் கூடாது. 
* விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.
*மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. இதுபோல் ‘வேப்பரப்’ களிம்பை அளவுக்கு மேல் மூக்கின் மீது தடவினால் மூக்கில் உள்ள ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மூக்கு புண்ணாகிவிடும். 

சைனஸ் பிரச்னைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையை முதலில் மேற்கொள்ள வேண்டும்.
அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஜலதோஷம் உள்ளவர்களின்அருகிலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப்பொருளைத் தவிர்க்க வேண்டும். 

2 comments:

  • sluxtpr says:
    20 June 2017 at 08:52

    Super article. Very useful for every on. Thanks to writer for this site.

  • Kumaresan says:
    16 April 2019 at 08:27

    Very useful.
    Thank you

Post a Comment